<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress/2.3" -->
<rss version="0.92">
<channel>
	<title>Raja</title>
	<link>http://raja.adadaa.com</link>
	<description>About your neighbour..</description>
	<lastBuildDate>Thu, 20 Nov 2008 10:49:21 +0000</lastBuildDate>
	<docs>http://backend.userland.com/rss092</docs>
	<language>en</language>
	
	<item>
		<title>கடற்கரைக் காட்சி</title>
		<description> மனிதர் முகம் காண மறுத்து தன்
முதுகு காட்டிக் கடலை
முத்தமிட முயற்சிக்கும் மனிதர்கள்..

நிஜத்தில்தான் நிறுத்த முடியவில்லை;
நிழற்படத்திலாவது..
புகைப்படக் கலைஞர்கள்
புன்னகைக்கும் அலைகள் முன்.

அன்றைய வேளை உணவறியாது
வயிற்றுப் பிழைப்பை வாயால் வாழும் சிறு தொழிலாளிகள்..

நேரம் போனது தெரியாமல் கடலை
நேசப் பார்வை பார்த்தவர்கள்
நேரம் உணரும்போது
நிதரிசனம் உறைக்கும்பொழுது

தவிப்புடன் எழுந்து தூசி தட்டுகிறார்கள்;
கவலை ஒட்டிக் கொள்கிறது.


. </description>
		<link>http://raja.adadaa.com/2008/10/10/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/</link>
			</item>
	<item>
		<title></title>
		<description>
 
சொல்லச் சொல்லத் தீராத என் கனவை,

நான் சொல்லத் தவிக்கிற என் மனசை,

செல்லச் செல்லப் பின் தொடரும் ஒரு நிழலை,

கல்லக் கல்லக் குறையாத வாழ்க்கையை,

இவையனைத்தையும் மௌனமாகச் சொல்லிக் கொடுத்து

மெல்ல மெல்லச் செதுக்கும் என்னை என் காதல்.. </description>
		<link>http://raja.adadaa.com/2008/04/29/8/</link>
			</item>
	<item>
		<title>எப்படிச் சொல்வது?</title>
		<description>

      
எப்படிச் சொல்வது?

பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்வது?

காதலுடன் பேசக்
காட்டாற்று வெள்ளமாய்க்
கரைபுரண்டு வந்த கவிதைகள் உன்
கண்களைக் கண்டதும் கானலாகின.

சொல்ல நினைத்துத் துடித்தவை
சொப்பனத்தில் கண்டனவாய்க் கலைந்து விட்டன.

ஒத்திகை பார்த்து வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு முன்னே ஓடியே விடுகின்றன.

கண்டவுடன்
கதவுக்குப் பின் மறையும் உன்னைக்
காண மனது துடித்தாலும்
பண்பாடு தடுக்கிறது;
என் பாடு சொல்ல வழியில்லையே?

சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொலவது? </description>
		<link>http://raja.adadaa.com/2008/03/06/%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81/</link>
			</item>
	<item>
		<title>நீ தான்..</title>
		<description>
       
கவிதாஞ்சலி:

என்
உள்ளத்தில் நீ தான்; உருவத்தில் நீ தான்!
கண்களில் நீ தான்; கண்ணீரிலும் நீ தான்!


கடமையிலும் நீ தான்; கவிதையிலும் நீ தான்!
எண்ணத்தில் நீ தான்; எழுத்திலும் நீ தான்!


பேச்சிலும் நீ தான்; மூச்சிலும் நீ தான்!
தூக்கத்தில் நீ தான்; ஏக்கத்திலும் நீ தான்!


மோகத்தில் நீ தான்; சோகத்திலும் நீ தான்!
சொல்லில் நீ தான்; சொப்பனத்திலும் நீ தான்!


சந்தோஷத்தில் நீ தான்; சங்கடத்தில் நீ தான்!
முத்தத்தில் நீ தான்; ...</description>
		<link>http://raja.adadaa.com/2008/03/06/%e0%ae%a8%e0%af%80-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/</link>
			</item>
	<item>
		<title>கவிதைக் குருதி..</title>
		<description> 

உன் கண்விழிக் கருமையின் கீழே காத்திருக்கும்
சிறு கண்ணீர்த்துளி நான்.

விழுவதும், விழிகளில் மீள்வதும் உன் பொறுப்பு.

கவிதைகள் சொல்லிக் கண் பார்த்திருப்பதும்
கண்ணீர் விழுங்கி வான்நோக்கியிருப்பதும்
காதலில் இயல்புதானெனினும்
காத்திருப்பு பதைக்க வைக்கிறது.

உறைவதா? மறைவதா?
உணர்வுகளின் வெப்பத்தில் கரைந்தொழிவதா?
சொல்.

காலக் கழிவுகளில் எஞ்சி விட்ட நினைவலைகளைக்
கணம்தோறும் சீர்தூக்கிப் பார்க்கிறேன்.
இமைகள் துடிக்க, இதயம் வலிக்க
உனக்காக சொரிந்தது கவிதைக் குருதி..

காதலுடன்
ராஜா </description>
		<link>http://raja.adadaa.com/2007/09/22/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/</link>
			</item>
	<item>
		<title>வணக்கம்! வாங்க! நல்லா இருக்கீங்களா?</title>
		<description>வணக்கம்! வாங்க! நல்லா இருக்கீங்களா?

என் பெயர் ராஜா.
வந்த இடம் பழனி, திண்டுக்கல் மாவட்டம்.
வளர் மற்றும் வாழிடம்: சென்னை.
வயது: 27
தொழில்: மனிதவளம்

வேறென்ன? மடலிடுங்கள்.. பேசுவோம்..

காதலுடன்
ராஜா

அலைபேசி: 98841 55777 </description>
		<link>http://raja.adadaa.com/2006/12/07/hello-world/</link>
			</item>
</channel>
</rss>
