ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.. Friday, Feb 13 2009
கவிதைகள் 11:31 pm

ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்..
உயிர் செதுக்கி உணர்வு பதுக்கி
ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.
சில கேள்விகள் எனக்கு..
கவிதையின் நோக்கம் என்ன?
அது யாருக்குச் சொந்தம்?
யாருக்காக எழுதப்பட்டதோ அவளுக்கா?
உயிர் கொடுத்துப் படைத்தானே அவனுக்கா?
கவிதைகளின் கடைசிக் குறி எங்கே?
வினாக்குறியுடன் முற்றுப் பெறவா
என் கவிதை எழுதப்பட்டது?
விழலுக்கிறைத்த நீரா என் உணர்வுகள்?
எது எப்படியாயினும்
என் கவிதைக்கு முகவரி எது?
என் கவிதைகள் உறங்க
காட்டுங்களேன் ஒரு கருவறை..
கடைசிக்கு ஒரு கல்லறையேனும்..