கடற்கரைக் காட்சி Friday, Oct 10 2008
Uncategorized 5:32 pm
மனிதர் முகம் காண மறுத்து தன்
முதுகு காட்டிக் கடலை
முத்தமிட முயற்சிக்கும் மனிதர்கள்..
நிஜத்தில்தான் நிறுத்த முடியவில்லை;
நிழற்படத்திலாவது..
புகைப்படக் கலைஞர்கள்
புன்னகைக்கும் அலைகள் முன்.
அன்றைய வேளை உணவறியாது
வயிற்றுப் பிழைப்பை வாயால் வாழும் சிறு தொழிலாளிகள்..
நேரம் போனது தெரியாமல் கடலை
நேசப் பார்வை பார்த்தவர்கள்
நேரம் உணரும்போது
நிதரிசனம் உறைக்கும்பொழுது
தவிப்புடன் எழுந்து தூசி தட்டுகிறார்கள்;
கவலை ஒட்டிக் கொள்கிறது.
.